;
Athirady Tamil News

தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி

0

இளவரசர் ஹரியை காதலித்ததால் உருவான பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல், காதலையே துறந்த ஒரு இளம்பெண்ணுக்கு, இளவரசி பீட்ரைஸ் அஞ்சலி செலுத்தும் வண்ணமாக இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி

இளவரசர் ஹரி தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davyயைப் பிரிந்தபின் கரோலின் (Caroline Flack) என்ற பெண்ணுடன் பழகத் துவங்கியுள்ளார்.

இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், கரோலினுடய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம்.

ஒரு கட்டத்தில், இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக கரோலினுடய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து, பிரிவதென முடிவு செய்து, இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.

பின்னர் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளையும், அவமானத்தையும் சந்தித்த கரோலின், லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உயிரை அவரே மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இளவரசி பீட்ரைஸ் அஞ்சலி

கரோலின் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி Berkshire என்னுமிடத்தில் Flackstock 2024 என்னும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கரோலினுக்கு தனது அஞ்சலியை செலுத்தும் வகையில், இளவரசர் ஹரியின் சகோதரியான இளவரசி பீட்ரைஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.