;
Athirady Tamil News

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

0

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய  தினம் (25.07.2024 ) யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இத் திட்டங்களை விரைவாக பூர்த்தி செய்வதற்காக, திட்டங்களின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.