;
Athirady Tamil News

கிளிநொச்சியில் பரசூட் முறையில் விதைக்கப்பட்ட நெல் அறுவடை விழா

0

கிளிநொச்சி செல்வாநகர் விவசாய போதனாசிரியர் பிரிவில் கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நெல் விதைப்பு முறையான பரசூட் முறையிலான விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று(25) நடைபெற்றது.

குறித்த அறுவடை நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், பரந்தன் விவசாய கல்லூரியின் விரிவுரையாளர் ம.ரஜீதன், மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.