;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு : இன்று வெளியாகவுள்ள சுற்றறிக்கை

0

ஜனாதிபதித் தேர்தலுக்கு (Presidential Election) அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சுற்றறிக்கை இன்று (26) வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

இன்று முதல் 10 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்லுக்கான அஞ்சல் மூல வாக்குகளுக்கு அரச ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்
இதேவேளை, இலங்கையின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.