;
Athirady Tamil News

பாண் விலை குறைப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

0

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன (MK Jayawardena) அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குறித்த விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாணின் விலை

இந்த விலைக் குறைப்பானது 450 கிராம் பாண்களுக்கு மட்டுமே என்றும் ஏனைய பேக்கரி தயாரிப்புகளுக்கு எந்த விலைக்குறைப்பும் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாணிற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.