;
Athirady Tamil News

வடக்கின் மாற்றுத் திறனாளிகளுக்கான இசைப் போட்டி

0

கனடா புதிய வாழ்வு நிறுவனத்தின் ஆதரவுடன் , நல்லூர் சாவிகா சங்கீத அறிவாலயம் நடத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப் போட்டி இன்று 27.07.2024 சனி காலை நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் சாவிகா சங்கீத அறிவாலய இயக்குநர் ஸகிஸ்ணா ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் முதலாவது பீடாதிபதி முனைவர் கமலநாதன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன், ஆனைப்பந்தி மெ மி த க பாடசாலை அதிபர் ஜெகானந்தம், புதிய வாழ்வு நிறுவன இணைப்பாளர் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

நிகழ்வில் நடுவர்களாக சாரங்கம் நுண்கலை மன்ற இயக்குனர் வாசஸ்பதி ராஜீந்திரன், ஓய்வு பெற்ற விரிவுரையாளர் விக்னேஸ்வரி நரேந்திரா, விரிவுரையாளர் நீ. பரந்தாமன், இசைக்கலைஞர்களான ர. சுரசாகித்யன் , நிரோஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்

நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுவலுவுடைய பிள்ளைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.