;
Athirady Tamil News

£24 மில்லியன் ஜாக்பாட்..! ஒரே நாள் இரவில் கோடீஸ்வரரான பிரித்தானியர்

0

அதிர்ஷ்டசாலியான பிரித்தானிய குடிமகன் ஒருவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யூரோ மில்லியன்ஸில் £24 மில்லியன் ஜாக்பாட்டை வென்றுள்ளார்.

பிரித்தானிய குடிமகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
இந்த அதிர்ஷ்டசாலி 04, 19, 23, 35, 37 என்ற ஐந்து முக்கிய எண்களையும், 04 மற்றும் 08 என்ற இரண்டு கூடுதல் எண்களையும் சரியாகப் பொருத்தி, இரவுவோடு இரவாக கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பிரித்தானிய குடிமகன் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட்டை வென்றுள்ளார்.

நேஷனல் லொட்டரியின் Andy Carter வெள்ளிக்கிழமை இது தொடர்பாக பேசுகையில், பிரித்தானிய யூரோ மில்லியன் விளையாட்டாளருக்கு இது அற்புதமான இரவாக அமைந்துள்ளது.

பிரித்தானியர் ஒருவர் தனது வாழ்க்கையை மாற்றும் £24 மில்லியன் ஜாக்பாட்டை வென்றுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில்
இந்த மாத தொடக்கத்தில் மற்றொரு அதிர்ஷ்டசாலி £33 மில்லியன் ஜாக்பாட் வென்றதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பிரித்தானியர் யூரோ மில்லியன்ஸ் ஜாக்பாட்டை வெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியனர் மேக்கர் விளையாட்டில், MWPC38104 என்ற குறியீட்டின் மூலம் பிரித்தானியர் ஒருவர் கோடீஸ்வரர் உருவாக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.