;
Athirady Tamil News

போக்குவரத்துத்துறையில் பதவி உயர்வு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

0

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வும், 5 பொது மேலாளர்களுக்கு பணியிடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து
இது தொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் வெளியிட்டுள்ள பதிவில் ,அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொது மேலாளர் சி.கே.ராகவன், கடலூர் மண்டலத்துக்கும், வேலூர் மண்டல பொது மேலாளர் ஜெ.எட்வின் சாமுவேல்,

விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கும், கடலூர் மண்டல பொது மேலாளர் எஸ்.ராஜா, நாகப்பட்டினம் மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஈரோடு மண்டல பொது மேலாளர் கே.ஸ்வர்ணலதா, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கும், உதகை மண்டல பொது மேலாளர் ஏ.கணபதி,

பதவி உயர்வு
வேலூர் மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பதவி உயர்வு அதேபோல், துணை மேலாளர் பொறுப்பில் உள்ள 7 பேருக்கு முதுநிலை துணை மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் பொது மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மதுரை ,தூத்துக்குடி , விழுப்புரம் , சேலம் , திருப்பூர் ,மதுரை ,காரைக்குடி சேர்ந்த மண்டல பொது மேலாளராகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.