;
Athirady Tamil News

யாழ். சிறையில் 74 தமிழக கடற்தொழிலாளர்கள்

0

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 74 தமிழக கடற்தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவில் , யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு கால கட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் இவர்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 64பேரின் வழக்குகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

கடந்த ஜூலை 1ஆம் திகதி 25 கடற்தொழிலாளர்களும் , ஜூலை 16ஆம் திகதி 04 கடற்தொழிலாளர்களும் , ஜூலை 11ஆம் திகதி 13 கடற்தொழிலாளர்களும், ஜூலை 22ஆம் திகதி 22 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைதாகியுள்ள 64 கடற்தொழிலாளர்களின் வழக்கு விசாரணைகளே செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.