;
Athirady Tamil News

யாழில் நள்ளிரவு வன்முறை கும்பல் அரங்கேற்றிய கொடூரம்! தீக்கிரையான வாகனம்

0

யாழ்ப்பாண பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிற்கு வன்முறை கும்பல் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (27-07-2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபரொருவர், தனது வாகனத்தினை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த நிலையில் நள்ளிரவு வேளை வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு வன்முறை கும்பல் தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.