;
Athirady Tamil News

பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்ற மாணவன் : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

0

முல்லைத்தீவில் (mullaitivu) மாணவனொருவர் பாடசாலையிற்கு கஞ்சா பொதி ஒன்றினை எடுத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தரம் எட்டில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும் போது சிறு கஞ்சா பொதி ஒன்றினை கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை
குறித்த பொதியை அவதானித்த சக மாணவன் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளதையடுத்து இது தொடர்பாக அந்த மாணவனை விசாரித்த பாடசாலை அதிபர் மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, மாணவனுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது மற்றும் வீட்டில் கஞ்சா பாவனை இடம்பெறுகின்றதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.