;
Athirady Tamil News

இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

0

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று முதற் கட்டமாக 29 பேருக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.