;
Athirady Tamil News

யாழில். கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தல்

0

கறுப்பு ஜூலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழில் நேற்று (28) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண வணிகர் கழகம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரம் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் இவ் நினைவேந்தல் நிகழ்வு நேற்று  மாலை நடைபெற்றது.

இதன் போது, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மதத் தலைவர்களால் பொதுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் உட்பட மதத்தலைவர்கள் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.