;
Athirady Tamil News

காலி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (29) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

ஹப்புகல நீர்த்தாங்கியின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

இதன்படி இன்று (29) காலை 8 மணி முதல் நாளை (30) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

போபே, பொடடல, ஹபுகம, ரத்கம, புஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.