;
Athirady Tamil News

இந்த மாநிலத்தில் தான் மது குடிக்கும் பெண்கள் அதிகம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

0

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

மது அருந்தும் பெண்கள்
எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற கேள்வியுடன் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதன் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் 15-49 வயது வரையிலான பெண்களில் 26.3 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட மிக அதிகம். மேகாலயாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 8.7 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர்.

ஆய்வில் தகவல்
தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட மிக மிக அதிகமாகும். அருணாச்சலப் பிரதேசத்தில் பெண்கள் மது குடிப்பது 3.3% ஆக உள்ளது. அதே வயதுடைய ஆண்களில் 59% பேர் மது குடிக்கின்றனர். சிக்கிம் மாநிலத்தில் 15-49 வயது வரையிலான பெண்களில் 0.3 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர்.

சத்தீஸ்கரில் 0.2 சதவீதம், ஜார்கண்ட் மாநிலத்தில் முன்பு 9.9%, திரிபுராவில் 9.6 சதவீதமாக பெண்கள் மது குடிக்கும் எண்ணிக்கை உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.