;
Athirady Tamil News

ஜேர்மனி தொடர்பில் அமெரிக்காவுக்கு புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஜேர்மனி தொடர்பில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, 2026ஆம் ஆண்டு முதல், தொலைதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை ஜேர்மனியில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

ஏவுகணை பிரச்சினை
இந்நிலையில் அமெரிக்கா அப்படி ஜேர்மனியில் ஏவுகணைகளைக் கொண்டு நிறுவுமானால், பதிலுக்கு மேற்கத்திய நாடுகளைத் தாக்கும் தொலைவில் ரஷ்யாவும் ஏவுகணைக் கொண்டு நிறுவும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா இப்படி ஏவுகணைகளைக் கொண்டுவந்து ஜேர்மனியில் நிறுவும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், பனிப்போர் விதத்தில், ஏவுகணை பிரச்சினையைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக புடின் எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.