;
Athirady Tamil News

நாட்டை விட்டு வெளியேறும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்

0

சம்பளப் பிரச்சினை காரணமாக சுமார் 80 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் அரசாங்கத்தின் தலையீட்டினால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

புதியவர்கள் நியமனம்

புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், ஏற்கனவே 25க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பணியாளர்கள் பயிற்சியளிக்கப்பட்டு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு குழுவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதுல கல்கெட்டிய குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.