;
Athirady Tamil News

பிரித்தானிய மக்களை மொத்தமாக உலுக்கிய சம்பவம்… 3 பிள்ளைகளின் தகவல் வெளியானது

0

பிரித்தானியாவில் Southport பகுதியில் நேற்று முன் தினம் நடந்த கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று பெண் பிள்ளைகளின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பலர் கண்ணீர் அஞ்சலி
குறித்த அப்பாவி பெண் பிள்ளைகள் தொடர்பில் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியத்திற்கு மேல் அந்த மூவரின் பெயர் வெளியிடப்பட்டது.

6 வயதேயான Bebe King, 7 வயது Elsie Dot Stancombe மற்றும் 9 வயது Alice Dasilva Aguiar ஆகியோரே Merseyside பகுதியில் கொல்லப்பட்டவர்கள். இவர்கள் மூவருமே கோடைகால விடுமுறை முகாமில் கலந்துகொண்ட போது கத்திக்குத்து தாக்குதலில் பலியானவர்கள்.

முதலில் Alice என்பவரின் குடும்பத்தினரே காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவலை உறுதி செய்துள்ளனர். பின்னர் மேலும் இருவரது தகவல் வெளியானது.

நேற்று முன் தின சம்பவத்தில் மொத்தம் 8 சிறார்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதில் ஐவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இவர்களுடன் மேலும் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

கைதான 17 வயது சிறுவன்
அதில் ஒருவர் 35 வயதான ஆசிரியர் Leanne Lucas. இவரே சிறார்களை காப்பாற்ற போராடியவர் என கூறப்படுகிறது. இன்னொருவர் 63 வயதான Jonathan Hayes. இவரும் பலத்த காயங்களுடன் தப்பியுள்ளார்.

சவுத்போர்ட் பகுதியில் Merseyside அருகே சிறார்களுக்காக கோடைகால முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் டசின் கணக்கான சிறார்கள் கலந்துகொண்டுள்ளனர். Taylor Swift பாணி யோகா மற்றும் நடன வகுப்புகள் என்பதால் சிறார்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டுள்ளனர்.

பகல் 11.50 மணியளவில் திடீரென்று முகாம் வளாகத்தில் நுழைந்த அந்த நபர், சிறார்கள் மீது சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளான். இந்த சம்பவத்தில் கைதான 17 வயது சிறுவனிடம் பொலிசார் விசாரணை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது 25 சிறார்கள் அந்த முகாமில் இருந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. முகத்தில் மாஸ்க் அணிந்து, டாக்ஸி சாரதிக்கு பணம் தர மறுத்து, தப்பியோடிய நபராக இருக்கலாம் தாக்குதலில் ஈடுபட்டவர் என்றும் அப்பகுதியில் உள்ள சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.