;
Athirady Tamil News

பாரிஸ் ஒலிம்பிக் துவக்க விழாவில் ஏற்பட்ட சர்ச்சை…கோபத்தில் டிரம்ப் கூறியது என்ன தெரியுமா?

0

பாரிஸில் இடம்பெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவில் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் லாஸ்ட் சப்பர் எனப்படும் இயேசுவின் இறுதி இரவு உணவு ஓவியத்தை பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர்,

“உண்மையில் நான் வெளிப்படையான ஒருவன், ஆனால் அவர்கள் செய்தது மிக மோசமான விடயம். கடந்த இரவு லாஸ்ட் சப்பர் நிகழ்வை அவர்கள் வெளிப்படுத்தியதை போன்று நாங்கள் செய்ய மாட்டோம்,” என்று தெரிவித்தார்.

சர்ச்சைக்கு உள்ளான அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக் கொண்டு லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் வகையில் மேஜையில் படுத்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.