;
Athirady Tamil News

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பொதுமக்களுக்கு ரத்தம் கொடுக்க தயார்: சீமான் அறிவிப்பு

0

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

வயநாடு நிலச்சரிவு
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. நிலச்சரிவில் சிக்கிய 100 -க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், சூரல்மலா பகுதியில் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.

சீமான் கோரிக்கை
கேரளா நிலச்சரிவு தொடர்பாக சீமான் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிகஅருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்டக்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்து இருப்பதாகவும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலத்த காயம் ஏற்பட்டு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகிறது.

சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசும், இந்திய ஒன்றிய அரசும் விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம்.

குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்!

மோகன்தாஸ் – 9344624697

கார்த்திக் – 9080126335

பழனி – 8903289969

தியாகராஜன் – 6382953434” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.