;
Athirady Tamil News

குழந்தை பிறக்க வேண்டி மனைவியை மருத்துவரிடம் காண்பித்த கணவர்.., பிறகு காத்திருந்த பேரதிர்ச்சி

0

குழந்தை பிறக்காததால் மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கணவருக்கு அதிர்ச்சி
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தைச் சேர்ந்தவர் 34 வயது சர்கேஜ். இவர், தனது திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பெண்ணின் பயோ டேட்டாவில் அவருடைய பிறந்த திகதி 1991ம் ஆண்டு மே 18-ம் திகதி என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த பெண்ணின் வயது சரக்கேஜை விட ஒன்றரை வயது குறைவு என்பதால் திருமணத்திற்கு அவர் சம்மதித்தார். பின்னர், இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணம் முடிந்து ஓராண்டு தாண்டியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், தனது மாணவியை மகப்பேறு மருத்துவரிடம் சர்கேஜ் அழைத்துச் சென்றார்.

அப்போது அவருக்கு சோனோகிராபி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பெண்ணின் வயது 40 முதல் 42 வயது வரை இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு இயற்கையாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

இதையடுத்து மனைவியின் வயது குறித்த ஒரிஜினல் கல்வி சான்றிதழை வாங்கி சரிபார்த்த பின்னர் தான் அவரின் உண்மையான வயது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, பெண்ணின் பிறந்த ஆண்டை 1985 என்பதற்கு பதில் 1991 என அவரது குடும்பத்தினர் மாற்றம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், வேஜல்பூர் காவல் நிலையத்தில் மனைவி மற்றும் மனைவி குடும்பத்தினர் மீது சர்கேஜ் புகார் அளித்தார். அந்த புகாரின் படி பெண்ணின் குடும்பத்தினர் 8 பேர் மீது பொலிஸார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.