;
Athirady Tamil News

தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

0

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தாஜ்மஹால்
தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இங்கு, உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஆனால், பாஜக ஆட்சியில் தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது. அதாவது, இதற்கு முன்பு தாஜ்மஹால் ஒரு இந்து கோயிலாக இருந்தது என்றும், அங்கு சிவன் கோயிலுக்கான அடையாளங்கள் இருக்கிறது என்றும் இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாகவே குற்றம் சுமத்தி வருகின்றன.

தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த கோயிலானது முகலாய மன்னர் ஆட்சியின் போது தான் தாஜ் மஹால் என மாற்றப்பட்டது என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், கன்வார் யாத்திரை நடைபெற்று வருவதால் மீனு ரத்தோர் என்ற பெண் ஒருவர் ‘கன்வார்’ ஒன்றை தோளில் சுமந்து கொண்டு வருகிறார்.

இவர், தாஜ்மஹாலுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற போது பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர், அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்டத் தலைவர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

அவர் பேசுகையில், “தாஜ்மஹால் தேஜோ மஹால் எனும் சிவன் கோவிலாக இருந்தது. என்னுடைய கனவில் சிவன் வந்து கங்கை நதியின் புனித நீரை தாஜ்மஹால் மீது தெளிக்க சொன்னார். ஆனால், என்னை பொலிஸார் தடுத்து நிறுத்திவிட்டனர்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.