;
Athirady Tamil News

கூலி வேலை செய்து நாளொன்றிற்கு 300 ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்

0

இந்தியாவில், கூலி வேலை செய்து நாளொன்றிற்கு 300 ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் ஒருவருக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புடைய வைரம் ஒன்று கிடைத்துள்ளது.

பூமித்தாய் கொடுத்த புதையல்

இந்தியாவிலுள்ள மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராஜூ. கடந்த வாரம் அவர் Panna சுரங்கத்தில் மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது, 19.22 காரட் எடையுள்ள வைரம் ஒன்றை அவர் கண்டெடுத்துள்ளார்.

உடனடியாக, அதை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கொண்டு செல்ல, அவர் அதை பரிசோதித்துவிட்டு, அதன் மதிப்பு சுமார் 80 லட்ச ரூபாய் ( இலங்கை மதிப்பில் 2,88,91,161.18 ரூபாய்) என்று கூறியுள்ளார்.

வைர அலுவலகம் அந்த வைரத்தை ஏலம் விடும்போது ராஜூவுக்கு அந்த பணம் கிடைக்கும்.

திட்டம் தயார்
என்றாலும், ஏழு பிள்ளைகளின் தந்தையான தனக்கு இருக்கும் கடனைத் தீர்க்கவும், பிள்ளைகளின் படிப்புக்காக முதலீடு செய்யவும், வீடுகள் கட்டவும், நிலம் மற்றும் ஒரு ட்ராக்டர் வாங்கவும் திட்டமிட்டுள்ளார் ராஜூ.

ஆனாலும், பணம் வரப்போகிறது என்பதற்காக ராஜூவும் அவரது சகோதரர்களும் வீட்டில் உட்கார்ந்துவிடவில்லை. அடுத்த நாளே வேலைக்குக் கிளம்பிவிட்டார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.