;
Athirady Tamil News

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா: வெளிவரும் அரசியல் வட்டார தகவல்கள்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) நியமிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பல சுற்று கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் கொழும்பு நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது முன்னதாக அறிவிக்கப்படவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது தாமதமானதாக தெரிவிக்கப்பட்டது.

கலந்துரையாடல்கள்
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் குறித்து நான்கு பேர் தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

பெரும்பாலான மக்கள் தம்மிக்க பெரேராவிடம் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை 29ஆம் திகதி நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு சின்னத்தில் தனி வேட்பாளரை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.