;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு….! மகிந்த அதிரடி அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna (SLPP) தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியே தீர்மானிக்க வேண்டும்
அதற்கு கட்சியே தீர்மானிக்க வேண்டும். நான் இல்லை. தீர்மானத்தை மாற்ற வேண்டும் என கட்சி கூறினால், அதனையும் செய்வேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் ஆதரவு இருக்கின்றதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (01) மஹரகமவில் (Maharagama) உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.