;
Athirady Tamil News

ருவாண்டாவில் 4,000 வழிபாட்டுத் தலங்கள் மூடல்: பின்னணி காரணம் என்ன?

0

ருவாண்டாவில் 4,000-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் மூடல்
கடந்த மாதத்தில் ருவாண்டாவில் 4,000-க்கும் அதிகமான வழிபாட்டுத் தளங்கள், குறிப்பாக சிறிய பெந்தெகோஸ்தே தேவாலயங்கள் மற்றும் சில பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, குறிப்பாக போதுமான ஒலி புகார் அமைப்பு இல்லாதது போன்ற காரணங்களைக் காட்டி அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த வழிபாட்டுத் தளங்கள் பல குகைகள், ஆறுகளின் கரைகள் போன்ற சாதாரண மற்ற இடங்களில் செயல்பட்டு வந்தன.

இந்த மூடல்களுக்கு மத்தியிலும், வழிபாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதே தங்களின் நோக்கம் என்றும், மதச் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஒழுங்குபடுத்துதல் நடவடிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் வழிபாட்டுத் தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 2018-ல் இயற்றப்பட்ட சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகள், பாதுகாப்பான சூழல் மற்றும் சத்தங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த சட்டத்தில் உள்ளன.

2018-ல் நடந்த முந்தைய நடவடிக்கையில் சுமார் 700 தேவாலயங்கள் மூடப்பட்டிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.