;
Athirady Tamil News

நல்லூர்த் திருவிழா வெளிவீதி பஜனை

0

நல்லூர் கந்தப்பெருமான் மஹோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இவ்வருடமும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி கொடியேற்றத் திருவிழாவில் இருந்து செப்ரெம்பர் 02ஆம் திகதி கொடியிறக்கத் திருவிழா வரை முருகப்பெருமான் மாலையில் வெளிவீதிவலம் வரும்போது
தினமும் பஜனை நடைபெறவுள்ளது. பஜனையில் பங்குபற்ற விரும்புகின்ற பாடசாலைகளும் (அதிபர்/பொறுப்பாசிரியர்/ சைவசமய ஆசிரியர்/சங்கீத ஆசிரியர்/ஆசிரியர்/அறநெறி ஆசிரியர்) ஆன்மீக, சமய நிறுவனங்களும் மேலதிக விவரங்களைப் பெற விரும்புகின்ற ஆர்வலர்களும் 077 222 0103 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.