;
Athirady Tamil News

கடலுக்குள் மூழ்கியே இந்திய மீனவர் உயிரிழப்பு: உடற்கூற்று அறிக்கையில் தகவல்

0

நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம்(01) இடம்பெற்ற விபத்தில், இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் தண்ணீருக்குள் மூழ்கியதாலேயே இறப்புச் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோதே இந்த விபத்துச் சம்பவித்திருந்தது. இறந்தவரின் சடலம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,

நேற்று உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே அந்த மீனவர் தண்ணீரில் மூழ்கியதால் தான் இறப்புச் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமருத்துவ அதிகாரி செ.பிரணவன் இந்த உடற்கூற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இதேவேளை, காணாமற்போன மீனவர் நேற்று மாலை வரை மீட்கப்படவில்லை என்றும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.