;
Athirady Tamil News

நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

0

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரி, அவசர கடிதமொன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதப்பட்டிருந்த போதும் அதனை நிறைவேற்றாது தரம் போதாமை காரணமாகப் பதில் அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரி இந்த அவசர கடிதம் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதிக்கு இரண்டாவது தடவையாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.