;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியே வெல்லும் : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதி

0

மொட்டுக் கட்சியின் இருப்பு என்பது மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) தான் தங்கியுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம் நிச்சயம் வெல்வோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவித்துள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்சவின் படத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் வந்தவர்களே கட்சி முடிவுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு செயற்பட்டாலும் மக்களும், கட்சி ஆதரவாளர்களும் கட்சியுடன்தான் நிற்கின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தல்
மகிந்த ராஜபக்சவிடம்தான் கட்சி இருப்பு உள்ளது. எனவே, யார் வெளியேறினாலும் கட்சி விழாது. சிலர் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். அது விரைவில் தெரியவரும் என தெரிவித்தார்.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம்தான் வெல்வோம். புதிய வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் எமது வசமே உள்ளார். ஏனைய வேட்பாளர்களுக்கு புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பெற முடியாது“ என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.