;
Athirady Tamil News

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்

0

ஜனாதிபதித் தேர்தலின் போது காவல்துறையினர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, சுதந்திரமானதும் நீதியானதுமாக தேர்தலை நடத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கான செலவு
இந்த நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தலுக்கான அச்சிடும் செலவினம் மூன்று மடங்கு அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப் பணிகளுக்காக சுமார் 800 மில்லியன் ரூபாய் செலவிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.