;
Athirady Tamil News

திருகோணமலை மக்களை சந்தித்த ரணில்

0

திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் இன்று (04) மதியம் இடம்பெற்றுள்ளது.

13 முக்கிய விடயங்கள்

இதன்போது, திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், அரச திணைக்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர் விளையாட்டரங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 13 முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், மற்றும் அரசியல் பிரமுகர்கள், துறைசார் வல்லுநர்கள் உட்பட 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.