;
Athirady Tamil News

கிளிநொச்சி கடற்பரப்பில் மர்மபொருளுடன் சிக்கிய மன்னாரை சேர்ந்த மூவர்!

0

கிளிநொச்சி – இரணைத்தீவு கடற்பரப்பில் சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை நேற்றையதினம் கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த படகில் இருந்து 176 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.