;
Athirady Tamil News

மூன்று சிறுமிகள் கொலை : பிரித்தானியாவில் தொடரும் போராட்டம்

0

ஐக்கிய இராச்சியம் (United Kingdom) முழுவதுமாக, முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் முக்கிய நகரங்களில் தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகளும் குழப்பங்களும் ஏற்பட்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைதியின்மை
ஹல் (Hull) , லிவர்பூல் (Liverpool), பிரிஸ்டல் (Bristal)உள்ளிட்ட பகுதிகளில் தற்சமயம் வெடித்துள்ள போராட்டங்களில் கடைகள் சூறையாடப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் காவல்துறை மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் (01) சவுத்போர்ட் (Southport) இல் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் நகரங்களில் இப்படியான அமைதியின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.