;
Athirady Tamil News

கனடாவில் தீயணைக்கச் சென்றவர் மரம் வீழ்ந்து பலி

0

கனடாவின் (Canada) கல்கரியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கல்கரி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஆல்பர்ட்டா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டுத்தீ

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கல்கரியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது மரம் முறிந்து விழுந்ததில் ஆல்பர்ட்டா படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.