;
Athirady Tamil News

போர் பதற்றத்திற்கு இடையே இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து

0

இஸ்ரேலில் (Israel) ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (04) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே அவர் பலியானதோடு, 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்கு கரையை சேர்ந்த பலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், காவல்துறையினர் அந்நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த நபர்களில் இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படடடுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில், காயமடைந்த 3 பேரும் வெவ்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.