;
Athirady Tamil News

5 பெண்களை திருமணம் செய்து சொகுசு வாழ்க்கை: காவல்துறை பிடியில் சிக்கிய நபர்

0

இந்தியா (India) – ஒடிசா (Odisha) மாநிலத்தில் 5 பெண்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றப்பட்ட 2 பெண்கள் அளித்தை முறைப்பாட்டை தொடர்ந்து காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரூ.2.10 லட்சம் ரொக்க பணம், கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, வெடிமருந்து போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், அவரின் 3 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
குறித்த நபரின் 05 மனைவிகளில் 02 பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் கொல்கத்தா மற்றும் இன்னொருவர் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இளம் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களை இணையவழி திருமண சேவை மூலம் தொடர்பு கொண்டு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.