;
Athirady Tamil News

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்: கொல்லப்பட்ட இரண்டு Al Jazeera செய்தியாளர்கள்

0

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு Al Jazeera செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Al Jazeera-வின் செய்தியாளர் இஸ்மாயில் அல் கோல் மற்றும் கேமராமேன் ரமி அல் ரெஃபீ ஆகிய இருவரும் கொல்லப்பட்ட போது ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே(Ismail Haniyeh)-வின் வீட்டிற்கு அருகே செய்தி சேகரிக்க பணியமர்த்தப்பட்டிருந்தனர் என சக ஊழியரான அனஸ் அல் ஷெரீப் கருத்துப்படி தெரியவந்துள்ளது.

அதே சமயம் இருவரும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே-யின் பிறந்த இடமான ஷாதி நகர்புற அகதிகள் முகாமில் செய்தி சேகரித்து கொண்டிருந்ததாக AP செய்தி நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்கள் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் எத்தகைய கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் காரில் சென்று கொண்டு இருந்த போது காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.