;
Athirady Tamil News

டயானா கமகேவுக்கு எதிரான மனு : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்று (05) குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தள்ளுபடி செய்யப்பட்ட மனு
அதன்பின்னர், 3 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றம், பெரும்பான்மையான நீதிபதிகளின் ஒப்புதலின் பேரில் மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

வெலிகம முன்னாள் மேயர் ரெஹான் ஜெயவிக்ரமவினால் டயானா கமகேவுக்கு எதிராக இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.