;
Athirady Tamil News

வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் நாட்டின் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க முடியுமென்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று(4)தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை அத்தகைய எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனவும், அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்காளர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு
எந்தவொரு வாக்காளரும், தங்களுக்குரிய வாக்காளர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு மாறாக வேறொரு நிலையத்தில் வாக்களிக்க முடியாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், தேர்தலின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் விதமாக, தங்கள் வாக்காளர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு மட்டும் சென்று வாக்களிக்கும்படி வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.