;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா

0

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கான (Sarath Fonseka) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

தம்மிக்க ரத்நாயக்கவினால் (Dhammika Rathnayake) இன்றைய தினம் (05) சற்று முன்னர் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14 வேட்பாளர்கள்
இதேவேளை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 14 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஓகஸ்ட் 15ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.