;
Athirady Tamil News

ஜீவன் தொண்டமானால் 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

0

வாழ்வாதாரம், கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சிகள்
மேலும் தெரிவிக்கையில், ”இதில் அறிவெழுச்சி என்ற திட்டத்தின் மூலமாக 19 ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளார்கள்.

குறிப்பாக இவர்கள் மத்திய ,சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் பயிற்சிகளை வழங்க உள்ளார்கள்.

முதற்தடவையாக இந்த திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவர்களும் இணைந்து பயணிக்க உள்ளார்கள்.

குறித்த திட்டமானது இன்னும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதோடு தொடர்ச்சியாக இதை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக உள்ளோம்“ என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.