;
Athirady Tamil News

பருத்தித்துறையில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளைப் பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(04.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
இதன்போது, பருத்தித்துறை, தும்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.