;
Athirady Tamil News

சூட்சுமமான முறையில் நடப்பட்டிருந்த ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள்!

0

தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் சூட்சுமமான முறையில் பயிரிடப்பட்டிருந்த ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையிர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் தீ வைத்து எறிக்கப்பட்டுள்ளன. இந்த கஞ்சா செடிகளின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமானது ஆகும்.

இதேவேளை, கஞ்சா செடி வளர்ப்பு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.