;
Athirady Tamil News

மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை.., வயநாட்டில் கண்கலங்க வைத்த சம்பவம்

0

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தனது மகளின் ஒரு கைக்கு மட்டும் இறுதிச்சடங்கு செய்த தந்தையின் துயரம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வெள்ளத்தில் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

மகளுக்கு இறுதிச்சடங்கு
இந்த நிலச்சரிவில் வயநாட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் ஜிசா மாயமானார். பல்வேறு தேடுதல் பணிக்கு பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது.

அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்ததை வைத்து தந்தை ராமசாமி உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து, தனது மகளின் ஒரு கைக்கு ராமசாமி இறுதிச்சடங்கு செய்தார். அவர் தனது மகளின் கையை வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு வைத்திருந்தது பார்த்து தன் முகத்தை மூடியபடி கதறி அழுகிறார்.

இந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் பரவிய நிலையில் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.