;
Athirady Tamil News

யாழ். மானிப்பாய் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) மானிப்பாய் பகுதியில் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம்(04) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் நடவடிக்கை
இதன்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.