;
Athirady Tamil News

கலைக்கப்பட்டது பங்களாதேஷ் நாடாளுமன்றம்

0

பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம், இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது.

பிரதமர் சேக் ஹசீனாவை பதவி விலகக் கோரிய வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

நாடாளுமன்றத்தை கலைக்க காலக்கெடு

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் நாடாளுமன்றத்தை கலைக்க காலக்கெடுவை நிர்ணயித்த சில மணிநேரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி அலுவலகத்தின இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, தமது காலக்கெடுவை நிறைவேற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாணவர் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.