;
Athirady Tamil News

1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதியளிக்கவில்லை: மறுக்கும் ரணில்

0

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் 1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதிமொழியளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

கடந்த மே முதலாம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் மேடையில், 1700 சம்பளம் வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.]

எனினும் தற்போது உறுதிமொழி வழங்கவில்லை என அறிவித்துள்ளார்.

உரிய சம்பளத்தை வழங்க வேண்டும்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அவர்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றனர் அந்த மக்கள் வாழும் லயன் அறைகள் உள்ள பகுதிகளை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளோம்.

தொழில் அமைச்சின் திணைக்களம் குறித்த தொகையை ஒதுக்கியது. அதற்கு எதிராக சில கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. தற்போது குறித்த கம்பனிகள் அமைச்சருடன் கலந்துரையாடி வருகின்றன. பழமையான பெருந்தோட்டத்துறை குறித்து என்னிடம் எவரும் கூற வேண்டாம்.

சில கம்பனிகளுக்கு சம்பளத்தை வழங்க முடியும் என்றால், வழங்க முடியாத கம்பனிகளிடமிருந்து நிலத்தை பெற்று சம்பளத்தை வழங்கக் கூடிய கம்பனிகளுக்கு அதனை வழங்குவதுதான் தீர்வு.

அந்த குத்தகையை இரத்துசெய்துவிட்து குறித்த பகுதிகளை கிராமங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.