;
Athirady Tamil News

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

0

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா நாளை (08) மாலை 4.30 மணியளவில் வைரவர் உற்சவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

கொடியேற்றம்
இதனடிப்படையில், நாளை முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நான்காம் ஆம் திகதி வரை 27 நாட்கள் இந்த மகோற்சவ பெருவிழா நடைபெறவுள்ளது.

மேலும், கொடியேற்றம் ஒன்பதாம் திகதியும் இரதோற்சவம் செப்டம்பர் முதலாம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.