;
Athirady Tamil News

நாட்டை விட்டு வெளியேற தயாராகும் பசில்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச போட்டியிட தீர்மானத்துள்ளார்.

தம்மிக்க பெரேரா
எதுவித முன் அறிவித்தலும் இன்றி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதை தம்மிக்க பெரேரா ஏற்க மறுத்ததுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், பெரமுன கட்சியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.